This Article is From May 07, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 5,409 ஆக உயர்வு

இன்று 2பேர் உள்பட மொத்தம் 37 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 2,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 5,409 ஆக உயர்வு

தமிழகத்தில் 36 அரசு மற்றும் 16 தனியார் ஆய்வகங்கள் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • ஒட்டுமொத்த அளவில் 5,409 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • டிஸ்சார்ஜ் ஆகுவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்திருக்கிறது.

சிகிச்சையால் குணம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து தற்போது 3,822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று பாதிக்கப்பட்ட 580 பேரில் 410 பேர் ஆண்கள், 170 பேர் பெண்கள் ஆவர். ஒட்டுமொத்த அளவில் 3,730 ஆண்கள், 1,677 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மட்டும் 14,195 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 436 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மற்றும் 16 தனியார் ஆய்வகங்கள் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றும் டிஸ்சார்ஜ் ஆகுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மொத்தம் இன்று 31 பேர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த அளவில் 1,547 பேருக்கு கொரோனா பாதிப்பு நீங்கியுள்ளது. 

இன்று 2பேர் உள்பட மொத்தம் 37 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 2,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

.