This Article is From Jul 18, 2019

விழுப்புரத்தில் பஸ் - வேன் நேருக்கு நேராக மோதி விபத்து! 9 பேர் உயிரிழப்பு!!

இன்று காலையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே விபத்து நேர்ந்துள்ளது. ஓட்டுனரின் கவனக்குறைவு விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விழுப்புரத்தில் பஸ் - வேன் நேருக்கு நேராக மோதி விபத்து! 9 பேர் உயிரிழப்பு!!

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் தனியார் பஸ் - வேன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 

கள்ளக்குறிச்சி அருகே அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த விழுத்து ஏற்பட்டது. தனியார் பஸ் ஒன்று சேலத்திலிருந்து சென்னையை நோக்கி சென்று கெண்டிருந்தது. இதேபோன்று மறு முனையில் சென்னையில் இருந்து காங்கேயம் நோக்கி மினி வேன் வந்து கொண்டிருந்தது. 

இந்த இரண்டும் கள்ளக்குறிச்சி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்தவர்கள் கோவை, சேலம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.