This Article is From Jun 03, 2019

ஏழை மக்களின் கல்விக்காக மாத சம்பளத்தை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார்!!

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட எச். வசந்த குமார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார்.

ஏழை மக்களின் கல்விக்காக மாத சம்பளத்தை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார்!!

நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஞாயிறன்று வசந்த குமார் ராஜினாமா செய்துள்ளார்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் எச். வசந்த குமார் தனது எம்.பி. ஊதியத்தை ஏழை மக்களின் கல்விக்காக வழங்கியுள்ளார். 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் எச். வசந்த குமார் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். 

தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை வசந்த குமார் தோற்கடித்தார். தேர்தல் வெற்றி குறித்து பேட்டியளித்த வசந்த குமார் எம்.பி., 'நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எனது ஊதியத்தை ஏழை மக்களின் கல்விக்காக அளித்து வந்தேன். அதேபோன்றுதான் எனது எம்.பி. ஊதியத்தையும் வழங்குகிறேன்' என்றார். 

மக்களவை தேர்தலில் வெற்றியை தொடர்ந்து, நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஞாயிறன்று வசந்த குமார் ராஜினாமா செய்துள்ளார். 

.