This Article is From Nov 15, 2019

சபரிமலை, ரஃபேல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் 2018ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதும் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சபரிமலை, ரஃபேல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

சபரிமைலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய வழக்கிலும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

New Delhi:

சபரிமலை கோயிலில் பெண்கைளை அனுமதிப்பது, ரஃபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட இரண்டு முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கவுள்ளது.

இதேபோல் 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனு மீதும் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என்று நூற்றாண்டுகளாக பெண்கள் வழிபட விதிக்கப்பட்ட தடையை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. 

இதற்கு இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதேபோல், சபரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியமும், மக்களின் நம்பிக்கைக்கைகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கூறிவந்தது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கேரள அரசு ஆதரவு தெரிவித்தது. இதனிடையே தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு நாள்களில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 65 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை விசாரித்து வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு பிப்ரவரி 6ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி ஒப்பந்தம் போட்டது.

இந்த ஒப்பந்தத்தில், பல்வேறு ஊழல் நடந்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது. ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சசர் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்துதரப்பு வாதத்தையும் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

.