This Article is From Aug 30, 2019

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய இளம்பெண் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!

நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் பட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி அடைந்த இளம்பெண் தற்கொலை செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய இளம்பெண் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!

மும்பையின் ஓஷிவரா பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஹைலைட்ஸ்

  • சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருந்தார் இளம்பெண்
  • ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்
  • நள்ளிரவு சுமார் 12.15-க்கு தற்கொலை சம்பவம் நடந்திருக்கிறது
Mumbai:

சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடிய இளம்பெண் ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி ஏற்பட்டு அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் ஓஷிவரா பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அங்கு சுமார் 23 வயது மதிக்கத்தக்க பியர்ல் பஞ்சாபி என்ற பெண் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வந்தார். நீண்ட நாட்களாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதனால் அவர் மன ரீதியில் பாதிப்பு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது எரிச்சல் அடையும் பியர்ல், தனது தாயாருடன் வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது. ஏற்கனவே அவர் 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். நல்ல வேளையாக அவர் காப்பாற்றப்பட்டார். 

இந்த நிலையில் தனது அபார்ட்மென்ட்டில் 3-வது மாடியில் இருந்து குதித்து பியர்ல் பஞ்சாபி தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவு சுமார் 12.15-க்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா வாய்ப்புகள் கிடைக்காததே அவரது தற்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது. 

.