This Article is From Oct 08, 2019

முடிவுக்கு வந்த காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

இருவருக்கும் இடையே இருவரும் வளர வேண்டும் என்ற எண்ணம் அவசியம். உலகம் தீர்ப்புகளுடன் காத்திருக்கிறது. எனவே புரிதலுடன் இருப்பது அவசியமாகிறது

முடிவுக்கு வந்த காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன், மைக்கேல் கோர்சலேவுடன் (Image courtesy: themichaelcorsale)

ஹைலைட்ஸ்

  • தனது வாழ்க்கையில் ஒரே ஒரு உறவு மட்டும் இருக்கும் என்று எண்ணியுள்ளார்.
  • ஏப்ரல் மாதம் மைக்கேலுடனான உறவை முறித்துக் கொண்டார்.
  • நான் நிறையக் கற்றுக் கொண்டேன். நல்ல அனுபவம் -ஸ்ருதி
New Delhi:

நடிகை ஸ்ருதிஹாசன், மைக்கேல் கோர்சலேவுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தது குறித்து தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார். 

வூட் ஃபீட் அப் வித் த் ஸ்டார்ஸ் தெலுங்கு என்ற நிகழ்ச்சியை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை கூறியுள்ளார். 

தனது வாழ்நாள் முழுவதும் ‘ஒரே ஒரு' உறவில் இருந்ததாகவும் தனக்கு ‘இது ஒரு நல்ல அனுபவம்' என்று தெரிவித்துள்ளார்.

“நான் மிகவும் கூலான நபர். மிகவும் அப்பாவி என்னைச் சுற்றியுள்ள எல்லோரும் என்னிடம் ‘பாஸ்; போன்ற தன்மையில் நடந்துகொள்வார்கள். இது ஒரு நல்ல அனுபவம். இப்போது கூட இதற்கு ஃபார்முலா ஏதும் இல்லை. நல்லவர்கள் நல்ல நேரங்களில்தான் நல்லவர்கள். சில மோசமான நேரத்தில் மோசமானவர்கள். இது ஒட்டுமொத்தமாக நல்ல அனுபவம் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். அது ஒரு கற்றல் அனுபவம்” என்று கூறினார். 

“ஆனால், நான் எப்போதும் ஒரு பெரிய அன்பைத் தேடுகிற அதற்காக காத்திருக்கிற நபராக இருக்கிறேன்” என்றும் தெரிவித்தார். 

ஸ்ருதி ஹாசன் மற்றும் மைக்கேல் கோர்சலே ஆகியோர் சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து கொண்டிருந்தனர். ஸ்ருதி ஹாசன் அவரைக்காண அமெரிக்கவுக்கு செல்வார். மைக்கேலும் ஸ்ருதியைக் காண இந்தியாவுக்கு வருவதுண்டு. ஏப்ரல் மாதத்தில் சமூக வலைதளத்தில் மைக்கேலின் பதிவு காதல் பிரிவுக்கு காரணமானது. 

.