This Article is From Jul 20, 2019

3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், 81 வயதில் காலமானார்!

Sheila Dikshit Dies:1998 முதல் 2013 வரை, தொடர்ந்து 3 முறை டெல்லியின் முதல்வராக பதவி வகித்தார் ஷீலா தீட்சித். 

3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், 81 வயதில் காலமானார்!

இன்று மதியம் 3:30 மணி அளவில் இயற்கை எய்தினார் ஷீலா தீட்சித்

New Delhi:

டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் ( Sheila Dikshit Dies ), 81 வயதில் காலமானார். மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவரான தீட்சித், உடல் நலக் குறைவு காரணமாக, டெல்லியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று மதியம் 3:30 மணி அளவில் இயற்கை எய்தினார். ஷீலா தீட்சித்தின் இறப்பு குறித்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 

டெல்லி காங்கிரஸின் தலைவராக இருந்த தீட்சித், 1998 முதல் 2003 வரை, தொடர்ந்து 3 முறை டெல்லியின் முதல்வராக பதவி வகித்தார். 

2014 ஆம் ஆண்டு அவர் கேரள மாநில ஆளுநராக ஆக்கப்பட்டார். ஆனால் 6 மாதத்தில் அந்தப் பதவியைத் துறந்தார் தீட்சித்.

ஷீலா தீட்சித் மறைவை அடுத்து காங்கிரஸ், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஷீலா தீட்சித் இறப்பு குறித்து வரும் செய்தியால் நாங்கள் வருத்தமடைகிறோம். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் ஸ்திரமாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி, “மிகவும் கரிசனமான மனம் கொண்டவர் ஷீலா தீட்சித். டெல்லியின் முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தகும் அளவுக்கு அவர் உழைத்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “ஷீலா தீட்சித், டெல்லியின் முதல்வராக இருந்தபோது, தலைநகரம் நல்ல வளர்ச்சியைப் பெற்றது. அதற்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தாருக்கும் சார்ந்தோருக்கும் இரங்கல்கள்” என்றுள்ளார்.

.