This Article is From Nov 22, 2018

காதல் தோல்வியால் காதலனைக் கொன்று உணவு சமைத்த பெண் கைது

அபுதாபியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவர் தனது முன்னாள் காதலனை கொன்று சமைத்த கொடூரம் சம்பவம் தற்போது வெளியாகி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காதல் தோல்வியால் காதலனைக் கொன்று உணவு சமைத்த பெண் கைது
Al Ain:

அபுதாபியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவர் தனது முன்னாள் காதலனை கொன்று சமைத்த கொடூரம் சம்பவம் தற்போது வெளியாகி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள காலீஜா டைம்ஸ் பத்திரிக்கை அளித்த தகவல் படி, தனது காதலை நிராகரித்து பிரிய முடிவெடுத்த (20) வயது காதலனை அப்பெண் கொன்றதாகவும், பின்னர் அந்நபரின் உடலை சிறு துண்டுகளாக வெட்டி, பிலெண்டரில் அரைத்து, மோரோக்கன் வகை உணவாக சமைத்து அங்குள்ள கட்டிடப்பணியாளர்களுக்கு கொடுத்ததாக அப்பெண் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

இந்த கொடூர சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிய நிலையில், கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரன் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றபோது பிலெண்டரில் பல் ஒன்றை பார்த்ததாகவும், அதன் பின்னர் சந்தேகமடைந்த சகோதரர் போலீசாரிடம் அதை தெரிவித்த போது இந்த திடுக்கிடும் சம்பவங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் இத்திடுக்கிடும் சம்பவம் குறித்து அப்பெண்ணிடம் கேட்ட போது கொலை செய்யப்பட்ட தனது காதலனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகவும் அதனால் தான் கோபமடைந்து இக்காரியத்தை செய்ததாக கூறியுள்ளார்.

.