This Article is From Jul 15, 2019

சமாஜ்வாதி கட்சி எம்.பி., மாநிலங்களவை பதவி மற்றும் கட்சியில் இருந்து திடீர் ராஜினாமா!

உத்தர பிரதேசம் மேல்சபை உறுப்பினராக பாஜக சார்பில் நீரஜ் சேகர் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமாஜ்வாதி கட்சி எம்.பி., மாநிலங்களவை பதவி மற்றும் கட்சியில் இருந்து திடீர் ராஜினாமா!

நீரஜ் சேகருக்கு அடுத்த ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் உள்ளது.

New Delhi:

முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனான நீரஜ் சேகர் இன்று தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். 

சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான நீரஜ் சேகருக்கு, அடுத்த ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து அவர், உத்தர பிரதேசம் மேல்சபை உறுப்பினராக பாஜக சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நீரஜ் சேகர் அவரது தந்தையின் தொகுதியான பாலியாவில் கடந்த 2007 இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, அதே தொகுதியில் 2009 தேர்தலிலும் களமிறக்கப்பட்டு மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், நீரஜ் சேகரின் திடீர் ராஜினாமாவை தொடர்ந்து, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களும், மக்களவையில் 5 உறுப்பினர்களும் மட்டுமே உள்ளனர். 

பாலியா மக்களவை தொகுதியில் மீண்டும் நீரஜ் போட்டியிட விரும்பியதாகவும் அதற்கு அகிலேஷ் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்தே இருவருக்கும் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை அமைந்ததை தொடர்ந்து, பல்வேறு எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் தங்களது கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு தாவிய வண்ணம் உள்ளனர். 

கோவாவில் இருந்து பல்வேறு காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவுக்கு கட்சி தாவிய நிலையில், தற்போது கர்நாடகாவிலும் காங்கிரஸ் - மஜத கூட்டணியை சேர்ந்த பல உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். 
 

.