ரூ. 740 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக அமைச்சர் வேலுமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஊழல் வழக்கு இருக்கிறபோதே, சாலைகள் மற்றும் மழைநீர்க் கால்வாய்கள் அமைப்பதற்கான 740கோடி ரூபாய் மாநகராட்சி டெண்டரில் புதிய ஊழல் புரிந்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி!
லஞ்ச ஊழல் தடுப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிடில்,திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.