This Article is From Mar 02, 2020

சூறையாடப்பட்ட டெல்லி பள்ளிகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்!

எனினும், அந்த பகுதிகளில் கட்டிட தொழிலாளிகள் கிடைப்பதும் சிரமமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சூறையாடப்பட்ட டெல்லி பள்ளிகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்!
New Delhi:

வடகிழக்கு டெல்லியில் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்ட 2 பள்ளிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. எனினும், அந்த பகுதிகளில் கட்டிட தொழிலாளிகள் கிடைப்பதும் சிரமமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட பெரும் கலவரத்தில் வன்முறையாளர்கள் ஷிவ் விஹாரில் உள்ள பள்ளியையும் முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் புத்தகங்களை தீ வைத்து எரித்துள்ளளனர். மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு அங்கிருந்த படியே அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதுதொடர்பாக ஷிவ் விஹாரில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் டிஆர்பி கான்வென்ட் பள்ளியின் நிர்வாகத் தலைவர் தர்மேஷ் சர்மா கூறும்போது, திங்கட்கிழமையன்று, வன்முறையாளர்கள் அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து கயிறுகளை கட்டி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். தொடர்ந்து, பள்ளியில் இருந்த கரும்பலகை, மேஜை, நாற்காலிகள், நூலகங்கள் என அனைத்திற்கும் தீ வைத்து எரித்துள்ளனர். 

இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்பாக மாணவர்கள் தங்கள் தேர்வுகளை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து கிளம்பி சென்றுவிட்டதாக கூறுகிறார். தொடர்ந்து, 24 மணி நேரமாக பள்ளி பற்றி எரிந்துள்ளது என்கிறார் சர்மா. தீயணைப்பு வாகனங்கள் எதுவும் வரவில்லை என்கிறார். மேலும், தீயணைப்புபடையினரையும் வரவிடாமல் தடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்மா கூறினார். 3 நாட்களுக்கு பின்பே போலீசாரால் இங்கு வர முடிந்தது. அவர்கள் நேற்று மாலை தான் இங்கு வந்தனர் என்றார். 

இந்த தாக்குதல் குறித்து, பள்ளியில் இருந்த பணியாளர்கள் இரண்டு பேர் கூறும்போது, பள்ளி வளாகத்திலே தாங்கள் அடைத்து வைக்கப்பட்டதாகவும், 2 நாட்களுக்கு பின்னர் புதன்கிழமையன்றே போலீசார் அவர்களை மீட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் பள்ளியில் பாதுகாவலராக பணிபுரியும் மனோஜூம், ராஜ்குமாரும் ஆவார்கள். இதில் ராஜ்குமார் குடும்பத்துடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 

அவர்கள் எங்களை கடுமையாக தாக்கினர், குழந்தைகளையும் அடிக்க முற்பட்டனர். நாங்கள் சாப்பிடுவதற்கு எதையும் விட்டுவைக்காமல் சென்றுவிட்டனர் என்று கண்ணீருடன் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். 

இதுதொடர்பாக பள்ளியின் உரிமையாளர் ராஜ்தானி என்டிடிவியிடம் கூறும்போது, திங்கட்கிழமையன்று பள்ளி கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் இருந்த அனைத்தையும் அவர்கள் அடித்து நொருக்கியதுடன், தீவைத்து எரித்தும் உள்ளனர். நாங்கள் காவல்துறைக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றார். 

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வெவ்வெறு இடங்களில் உள்ள 3 பள்ளிகள் வன்முறையாளர்களால் குறி வைக்கப்பட்டுள்ளது. பிரிஜூபுரியில் உள்ள 3000 மாணவர்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளியிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீ வைக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பள்ளியில் தேர்வு நடந்ததால் மாணவர்கள் தேர்வை முடித்து முன்னதாக கிளம்பி சென்றுவிட்டனர். 

.