This Article is From Jan 25, 2019

''மாநில கட்சிகள்தான் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும்'' - சீமான் உறுதி

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள்தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

''மாநில கட்சிகள்தான் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும்'' - சீமான் உறுதி

பாஜக வெற்றி பெறும் என்ற மாயை பரப்பப்படுவதாக சீமான் கூறியுள்ளார்.

மாநில கட்சிகள்தான் மத்தியில் ஆட்சியை  தீர்மானிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைகிறது. 

ஆனால் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு அமைப்பாக இன்னும் திரளவில்லை. உத்தரப்பிரதேசத்தை பொறுத்தளவில் மாநில கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை காங்கிரசை கழற்றி விட்டுள்ளன. 

ஆந்திராவில் தெலுங்கு தேசமும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசும் தனித்து போட்டியிடும் என தெரிகிறது. 

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநில கட்சிகள்தான் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் என்று கூறினார். 
 

.