This Article is From Oct 22, 2019

நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்திற்கு ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!!

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் நாளை மிக மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 

நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்திற்கு ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!!

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்தியா வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில்  கடந்த 15ம் தேதி முதலே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் இந்த மழையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதே நேரத்தில் 22ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு நேற்றைய தினம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் நாளை மிக மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 

தமிழகம் மற்றும்  புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதுவும் குறிப்பாக இன்று தொடங்கி அடுத்து 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

கேரளா, கடலோர கர்நாடகா, புதுச்சேரி, தமிழகம், காரைக்கால் ஆகிய இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழை இருக்கும் எனவும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூரில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.