This Article is From Aug 18, 2019

“இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை!”- ராணுவ அமைச்சர் கறார்

ஹரியானாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் இப்படி பேசியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது

“இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை!”- ராணுவ அமைச்சர் கறார்

“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதில் ஜம்மூ காஷ்மீர் குறித்து பேசப்படாது. மாறாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசப்படும்”

New Delhi:

பாகிஸ்தான் அரசு, ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச அளவில் இந்திய மீது அழுத்தம் கொடுக்க முயன்று வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதில் ஜம்மூ காஷ்மீர் குறித்து பேசப்படாது. மாறாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசப்படும்” என்று கூறியுள்ளார். 

ஹரியானாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் இப்படி பேசியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் மேலும் பேசிய ராஜ்நாத் சிங், “பாகிஸ்தான் அரசு, தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருவதை நிறுத்தினால்தான், பேச்சுவார்த்தை நடக்கும்.

8t3oc5eo

முன்னதாக பாகிஸ்தான், சீனாவின் உதவியோடு ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது.

சட்டப் பிரிவு 370 குறித்து நடவடிக்கை எடுத்தால், அது தேசத்தை இரண்டாக்கும் என்று பலர் கருதினார்கள். அதில் கை வைத்தால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே வராது என்றும் கூறினார்கள். பாஜக-வுக்கு வாக்கு வங்கி அரசியலைப் பற்றித் துளியும் கவலை இல்லை. தேச ஒற்றுமையை முன்னிருத்தும் அரசியலைத்தான் நாங்கள் செய்வோம்” என்று உரையாற்றினார். 

முன்னதாக பாகிஸ்தான், சீனாவின் உதவியோடு ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிலும் ‘பூட்டிய அறை பேச்சுவார்த்தை' நடத்தவைத்தது பாகிஸ்தான். பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை செய்தனர். 

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்றப் பெரும்பான்மை நாடுகள், ‘காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானும் இந்தியாவும் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று தெரிவித்துவிட்டன. எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படாமலேயே அந்தக் கூட்டம் முடிவடைந்தது. இது பாகிஸ்தானுக்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். 

.