This Article is From Nov 28, 2019

Rain alert for TN - “இந்த 3 நாட்களில் தமிழகத்தில் கொட்டப் போகுது மழை…”- நாள் குறித்த வானிலை மையம்!

Rain news - கடந்த 24 மணி நேரத்தில் தாம்பரத்தில் அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

Rain alert for TN - “இந்த 3 நாட்களில் தமிழகத்தில் கொட்டப் போகுது மழை…”- நாள் குறித்த வானிலை மையம்!

Rain news - தமிழகத்தில் இதுவரை பெய்திருக்க வேண்டிய மழை அளவு 35 சென்டி மீட்டர் ஆகும். ஆனால், கிடைத்திருப்பது 32 சென்டி மீட்டர் மட்டுமே

Rain News - தமிழக அளவில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மாநில அளவில் பரவலாக மழை (Heavy Rain) பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இத குறித்து இந்திய வானிலை மையத்தின், சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், “வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும். குறிப்பாக டிசம்பர் 2 ஆம் தேதி வரை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிலும் நவம்பர் 30, டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதியில் மாநில அளவில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். 

தமிழகத்தில் இதுவரை பெய்திருக்க வேண்டிய மழை அளவு 35 சென்டி மீட்டர் ஆகும். ஆனால், கிடைத்திருப்பது 32 சென்டி மீட்டர் மட்டுமே. அதேபோல சென்னையில் 59 சென்டி மீட்டர் மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 39 சென்டி மீட்டர்தான் கிடைத்துள்ளது. வரும் நாட்களில் இந்த மழைப் பற்றாக்குறையானது குறையும்.

கடந்த 24 மணி நேரத்தில் தாம்பரத்தில் அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” என்று தகவல் தெரிவித்தார். 


 

.