This Article is From Nov 22, 2018

யானையின் மீது மோதி தடம் புரண்ட ரயில்

அசாமில் யானை மீத மோதிய ரயில் ஒன்று தடம்புரண்டது. அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

யானையின் மீது மோதி தடம் புரண்ட ரயில்

பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. யானை உயிரிழந்து விட்டது.

Guwahati:

அசாம் மாநிலத்தில் யானை மீது ரயில் ஒன்று மோதியதால் தடம்புரண்டது. இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் யானையின் உயிர் பிரிந்தது.

அசாமின் திதாபர் மற்றும் மரியானி ரயில் நிலையங்களுக்கு இடையில், அதிகாலை 4.50-க்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. விபத்துக்குள்ளான கவுகாத்தி – லீடோ விரைவு ரயிலில் பயணிகளுடன், சரக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன.

ரயில் தடம்புரண்டதை தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து காலை 7.45-ரயில் மீட்கப்பட்டு காலை 8.06- க்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

சம்பவம் நடந்த பகுதியில் யானைகள் அடிக்கடி தண்டவாளத்தை கடந்து செல்கின்றன. யானைகளைக் கண்டால் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என ரயில் ஓட்டுனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்பாராத விதமாக இந்த சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

.