This Article is From Aug 03, 2018

ஆளில்ல தீவில் இருந்து மீட்கப்பட்ட 7 நாய்குட்டிகள் ; உணவின்றி தவித்த பரிதாபம்

கனடா நாடு மனிடோபா மாகாணத்தில் உள்ள ஆளில்ல தீவில் இருந்து 7 நாய்குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

ஆளில்ல தீவில் இருந்து மீட்கப்பட்ட 7 நாய்குட்டிகள் ; உணவின்றி தவித்த பரிதாபம்

கனடா நாடு மனிடோபா மாகாணத்தில் உள்ள ஆளில்ல தீவில் இருந்து 7 நாய்குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வின்னிபிக் பகுதியை சுற்றி உள்ள நீர்நிலைகளில் பயணம் மேற்கொண்ட இரண்டு படகோட்டிகள், நள்ளிரவில் நாய்குட்டிகளின் சத்தத்தை கேட்டுள்ளனர். ஆபத்தில் சிக்கி உள்ளது போன்று சத்தம் ஏற்பட்டதால், படகோட்டி டெப் நாய்குட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஆளில்ல தீவில், நாய்குட்டிகளை தேடிச் சென்ற படகோட்டிகள், 7 நாய்குட்டிகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நாய்குட்டிகள் நான்கு மாத வயதுடையதாக இருக்கக் கூடும் என்று டெப் தெரிவித்துள்ளார். மேலும், படகில் இருந்த உணவுகளை நாய்குட்டிகளுக்கு அளித்துள்ளனர். நாய்குட்டிகள், பல நாட்களாக உணவின்றி இருந்துள்ளதாக படகோட்டி தெரிவித்தார். மேலும், 500 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள இருப்பதால், வின்னிபிக் செல்லப்பிராணிகள் காப்பகத்தில் நாய்குட்டிகளை விட்டுச்செல்ல டெப் முடிவு செய்துள்ளார்

“ஆளில்ல தீவில் உணவின்றி மாட்டிக் கொண்ட நாய்குட்டிகள், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். 7 நாய்குட்டிகளை மீட்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று டெப் தெரிவித்துள்ளார்
 

Click for more trending news


.