This Article is From May 18, 2019

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர் : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஆப்பரேஷனில் மத்திய ரிசர்வ் போலீசார், ராஷ்டிரிய ரைபிள்ஸ் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டனர்.

அதிகாலை 2.10-க்கு பாதுகாப்பு படையினருக்கு தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

Pulwama:

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பன்சாம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாவ தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 2.10-க்கு பாதுகாப்பு படையினருக்கு தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. 

இந்த ஆப்பரேஷனில் மத்திய ரிசர்வ் போலீசார், ராஷ்டிரிய ரைபிள்ஸ் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டனர். என்கவுன்ட்டர் முடிவில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோன்று அனந்த்நாக்கில் என்கவுன்ட்டர் நடைபெற்றது. 

வியாழன் அன்று தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லும் முயற்சியில் புல்வாமா மற்றும் சோபியான் பகுதியில் நடைபெற்ற 2 என்கவுன்ட்டர்களில் 2 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் 2 பேரும் உயிரிழந்தனர். 
 

.