This Article is From Jun 04, 2019

நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு கோரிய பிரக்யா சிங் தக்கூரின் மனு தள்ளுபடி

பிரக்யா சிங் தக்கூர் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்திற்கு சரிவர ஆஜராகவில்லை என மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில் 7 பேரும் வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு கோரிய பிரக்யா சிங் தக்கூரின் மனு தள்ளுபடி

நாடாளுமன்ற நடைமுறைகளை முடிப்பதற்காக வழக்கில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

Mumbai:

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தக்கூர் நீதிமன்றத்தில் ஆஜாராக விலக்கு அளிக்க கோரி செய்யப்பட்ட மனுத்தாக்கல் தள்ளுபடி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிம் மாவட்டத்தில் மாலேகான் பகுதியில்  2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 தேதி ஒரு மசூதியில் வெடிகுண்டு வீசப்பட்டது இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் பிரக்யா சிங் தக்கூர்  ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பிரக்யா சிங் தக்கூர் பாஜக வேட்பாளராக போபால் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 

பிரக்யா சிங் தக்கூர் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்திற்கு சரிவர ஆஜராகவில்லை என மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில் 7 பேரும் வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

 பிரக்யா சிங் தக்கூர் சார்பாக பாஜக வழக்கறிஞர்கள் குழு, நாடாளுமன்ற நடைமுறைகளை முடிக்கவேண்டிய தேவை உள்ளது எனவே தனக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

நீதிபதிகள் “நாடாளுமன்ற நடைமுறைகளை முடிப்பதற்காக வழக்கில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது முக்கிய சாட்சிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராவது அவசியம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். ஜூன் 7 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவு

.