விபத்தில் சிக்கிய 42 வயது நபர் மும்பையிலுள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, அங்கு அவர் மூளை சாவு அடந்தார். அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். பிறகு மும்பையிலிருந்து அவரது இதயம் டெல்லி கொண்டு செல்லப்பட்டு ஒருவருக்கு தானமளிக்கப் பட்டது.
ஜூன் 26-ம் தேதி, ஃபோர்டிஸ் ஹாஸ்பிடல் டெல்லி போலீஸுடன் இணைந்து கிரீன் காரிடர் முறை அமைத்து.
1164 கிலோ மீட்டர் தூரத்தை, இரண்டரை மணி நேரத்தில் கடந்து வெற்றிகரமாக இதயத்தை ஆம்புலன்ஸ் கொண்டு சென்ரிருக்கிறது.
ஒருவரிடமிருந்து எடுக்கப் பட்ட இதயம் 4 மணி நேரம் மட்டுமே வேலை உயிரோட்டமாக இருக்கும். அதற்குள் மற்றவருக்கு பொருத்தி விட வேண்டும்.
உடல் உறுப்புகளை விரைவில் எடுத்துச் சென்று வேண்டுவோருக்கு சரியான சமயத்தில் பொருத்த கிரீன் காரிடர் அவசியமாகிறது.
சர்ஜரியும் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
கிரீன் காரிடர் முறையில் கொண்டு வந்த இதயம் 53 வயது பெண்மணிக்குப் பொருத்தப் பட்டுள்ளது.