This Article is From Oct 31, 2019

INX Media Case: முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திற்கு நவம்பர் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த அக்டோபர் 16-ம்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் பண மோசடி புகாரின்பேரில் கைது செய்து, திகார் சிறையில் இருந்து தங்களது கஸ்டடிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை கஸ்டடி முடிந்து திகாருக்கு சென்றுள்ளார் சிதம்பரம். 

அமலாக்கத்துறையின் கஸ்டடி முடிந்த நிலையில் இன்று சிதம்பரம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

New Delhi:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு நவம்பர் 13-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சிதம்பரத்தின் அமலாக்கத்துறை கஸ்டடி முடிவடைந்தது. 

திகார் சிறையில் சிதம்பரத்திற்கு தனி அறை, வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டில் சமைத்த உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 

இன்று அமலாக்கத்துறையின் கஸ்டடி முடிந்த நிலையில், இடைக்கால ஜாமீன் வழங்குமாறு சிதம்பரம் கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பான வழக்கு நாளை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. திங்களன்று சிதம்பரம் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிதம்பரம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற சிதம்பரம் தாக்கல் செய்த மனு நவம்பர் 4-ம்தேதி விசாரிக்கப்பட உள்ளது. 

சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டு வருகிறார். இதுநாள் வரையில் சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டை எந்தவொரு விசாரணை அமைப்பும் நிரூபிக்கவில்லை என்று சிபல் வாதிட்டார். 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த அக்டோபர் 16-ம்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் பண மோசடி புகாரின்பேரில் கைது செய்து, திகார் சிறையில் இருந்து தங்களது கஸ்டடிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை கஸ்டடி முடிந்து திகாருக்கு சென்றுள்ளார் சிதம்பரம். 

.