This Article is From Oct 06, 2019

பிரியங்கா காந்தியுடன் வங்கதேச பிரதமர் சந்திப்பு! வைரலாகும் புகைப்படம்!!

பிரியங்காவை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆரத்தழுவி வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. உடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளார்.

பிரியங்கா காந்தியுடன் வங்கதேச பிரதமர் சந்திப்பு! வைரலாகும் புகைப்படம்!!

ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த அவர், இருதரப்பு உறவுகள் குறித்தும், வர்த்தகம் தொடர்பாகவும் விரிவாக பேசினார்.

இந்த நிலையில் இன்று அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார். இருவரும் ஆரத் தழுவி வாழ்த்துக் கூறிக் கொள்ளும் புகைப்படத்தை பிரியங்கா காந்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரியங்கா தனது ட்விட்டரில் பதிவில்,'பேரன்பு மிக்க ஷேக் ஹசீனாவை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்தேன். தனிப்பட்ட வாழ்க்கையில் பல இழப்புகளை அவர் சந்தித்துள்ளார். அரசியல் வாழ்விலும் பல சவால்கள் அவருக்கு உள்ளன. இவற்றையெல்லாம் தனது வலிமையால் அவர் வெற்றி கொண்டுள்ளார். துணிச்சல், விடா முயற்சி ஆகியவற்றில் அவருக்கு பெரும் நம்பிக்கை உண்டு. என்னை ஊக்கப்படுத்தும் சக்தியாக அவர் எப்போதும் இருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடன் இருந்தார்.

வங்கதேசத்தில் நீண்ட கால பிரதமராக இருந்து வரும் ஷேக் ஹசீனா, கடந்த 2009-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தது.  

.