This Article is From Jul 07, 2020

ஒரே நாளில் சென்னையில் 2,573 பேர் டிஸ்சார்ஜ்; 1,747 பேருக்கு பாதிப்பு- ஜூலை 7 மண்டலவாரி விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44,882 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஒரே நாளில் சென்னையில் 2,573 பேர் டிஸ்சார்ஜ்; 1,747 பேருக்கு பாதிப்பு- ஜூலை 7 மண்டலவாரி விவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,990 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • இதுவரை சென்னையில் 1,082 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
  • நேற்று தொற்றைவிட டிஸ்சார்ஜ் விகிதம் அதிகமாக இருந்தது

தமிழகத்தில் நேற்று 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,747 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,14,978 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,793 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 66,571 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 46,833 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 61 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,571 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (07.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,243

மணலி - 551

மாதவரம் - 909

தண்டையார்பேட்டை - 1,810

ராயபுரம் - 1,999

திரு.வி.க நகர் - 1,898

அம்பத்தூர் - 1,314

அண்ணா நகர் - 2,383

தேனாம்பேட்டை - 2,447

கோடம்பாக்கம் - 2,990

வளசரவாக்கம் - 1,228

ஆலந்தூர் - 968

 அடையாறு - 1,673

பெருங்குடி - 890

சோழிங்கநல்லூர் - 587

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,162

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44,882 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 64 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,082 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 24,052 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,990 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 2,447 மற்றும் 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 551 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 


 

.