This Article is From Jul 02, 2020

சென்னையில் கொரோனாவிலிருந்து 61% பேர் மீண்டு வந்துள்ளனர்: ஜூலை 2 ஆம் தேதி மண்டலவாரி நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36,826 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவிலிருந்து 61% பேர் மீண்டு வந்துள்ளனர்: ஜூலை 2 ஆம் தேதி மண்டலவாரி நிலவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணா நகர் மண்டலத்தில் 2,948 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் இதுவரை கொரோனாவால் 926 பேர் உயிரிழந்துள்ளனர்
  • அண்ணா நகர் மண்டலத்தில் அதிக ஆக்டிவ் கேஸ் உள்ளது
  • சோழிங்கநல்லூர் மண்டலத்தில் குறைந்த ஆக்டிவ் கேஸ் உள்ளது

தமிழகத்தில் நேற்று 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 2,182 பேர். ஒட்டுமொத்த அளவில் 94,049 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,852 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 52,926 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 39,856 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,264 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (02.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,060

மணலி - 521

மாதவரம் - 917

தண்டையார்பேட்டை - 1,791

ராயபுரம் - 2,369

திரு.வி.க நகர் - 1,775

அம்பத்தூர் - 1,183

அண்ணா நகர் - 2,948

தேனாம்பேட்டை - 2,103

கோடம்பாக்கம் - 2,519

வளசரவாக்கம் - 1,080

ஆலந்தூர் - 801

 அடையாறு - 1,593

பெருங்குடி - 829

சோழிங்கநல்லூர் - 483

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 805

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36,826 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 61 சதவீத மீட்பு விகிம் ஆகும். 926 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 22,777 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணா நகர் மண்டலத்தில் 2,948 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், ராயபுரம் மண்டலத்திலும் முறையே 2,519 மற்றும் 2,369 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் மிகக் குறைவாக 483 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

.