This Article is From Jul 04, 2018

காரில் கடத்தப்பட்ட 191 கிலோ கஞ்சா.. சுற்றிவளைத்த அதிகாரிகள்

சென்னை அருகே செங்கல்பட்டில் 190 கிலோ கஞ்சா கடத்திய இருவர் காவல்துறையில் சிக்கிக் கொண்டனர்

காரில் கடத்தப்பட்ட 191 கிலோ கஞ்சா.. சுற்றிவளைத்த அதிகாரிகள்

சென்னை அருகே செங்கல்பட்டில் 190 கிலோ கஞ்சா கடத்திய இருவர் காவல்துறையில் சிக்கிக் கொண்டனர்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் செங்கல்பட்டு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது காரில் கடத்தி வரப்பட்ட 191 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் `செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 191 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்டவை. கடத்தலில் ஈடுபட்ட தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் கணேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடக்கிறது’ இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேப் போன்று நேற்று மதுரையில் ஒரு லட்சம் போதை மாத்திரைகளும், 97 போதை சிரப் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.