This Article is From Jun 27, 2019

சண்டிகரில் காரில் உள்ள இரும்புக் கம்பியை எடுத்து அடித்த பெண் - வைரல் வீடியோ

ஷீத்தல் சர்மா என்ற பெண் எந்தவொரு சிக்கனலும் இல்லாமல் திடீரென காரை பின்னோக்கி செலுத்தினார். இதனால் ஷீத்தல் சர்மாவின் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த நிதிஷீன் கார் வாகனத்தின் மீது இடித்து விட்டார். இருவரது காரும் சேதமடைந்துள்ளது.

சண்டிகரில்  காரில் உள்ள இரும்புக் கம்பியை எடுத்து அடித்த பெண் - வைரல் வீடியோ

ஆத்திரமடைந்த ஷீத்தல் காரில் இருந்து இரும்புக் கம்பியுடன் இறங்கி நிதீஷை தாக்கத் தொடங்கினார்.

Chandigarh:

சண்டிகரில் பெண் ஒருவர் தன் காரிலிருந்து இரும்பு கம்பியினை எடுத்து ஒரு ஆணைத் தாக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

நேற்று ஷீத்தல் சர்மா என்ற பெண் எந்தவொரு சிக்கனலும் இல்லாமல் திடீரென காரை பின்னோக்கி செலுத்தினார். இதனால் ஷீத்தல் சர்மாவின் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த நிதிஷீன் கார் வாகனத்தின் மீது இடித்து விட்டார். இருவரது காரும் சேதமடைந்துள்ளது. 

ஆத்திரமடைந்த ஷீத்தல் காரில் இருந்து இரும்புக் கம்பியுடன் இறங்கி நிதீஷை தாக்கத் தொடங்கினார்.

26 வயதான நிதீஷ் ஷீத்தல் காரை வேகமாக ஓட்டியதாக குற்றம் சாட்டினார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணை கைது செய்தனர். அவரது அறிக்கையை பதிவு செய்து விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பெண் ஷீத்தல் சர்மா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

.