This Article is From Sep 09, 2018

கேரள கான்வெண்ட் வளாகத்தில், கன்னியாஸ்திரியின் உடல் கண்டெடுப்பு

விசாரணையில், இறந்த கன்னியாஸ்திரியின் பெயர் சூசன் மேத்யூ என்பது தெரிய வந்துள்ளது

கேரள கான்வெண்ட் வளாகத்தில், கன்னியாஸ்திரியின் உடல் கண்டெடுப்பு
Thiruvananthapuram:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கன்னூர் புனித ஸ்டீபன் பள்ளி. இங்கு ஆசிரியராக பணியாற்ற வந்த கன்னியாஸ்திரி இன்று காலை மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று காலை 9 மணிக்கு, கான்வெண்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இறந்த கன்னியாஸ்திரியின் பெயர் சூசன் மேத்யூ என்பது தெரிய வந்துள்ளது. 54வயதான இவர், கடந்த 12 ஆண்டுகளாக ஸ்டீபன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கன்னியாஸ்திரியின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய கேரள காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

.