This Article is From Nov 18, 2018

தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் என்.டி.ராமராவின் பேத்தி; வேட்புமனு தாக்கல்!

தாத்தா என்.டி.ராம ராவ், அப்பா மற்றும் மாமா என்.சந்திரபாபு நாயுடுவின் அரசியல் லட்சியங்களால் ஈர்ப்பு ஏற்பட்டதாக சுஹாசினி கூறினார்.

தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் என்.டி.ராமராவின் பேத்தி; வேட்புமனு தாக்கல்!

என்.டி.ஆரின் மகனான ஹரிகிருஷ்ணாவின் மகள் சுஹாசினி.

Hyderabad:

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமராவின் பேத்தி என்.சுஹாசினி குகாட்பலி தொகுதியில் போட்டியிட உள்ளார். எனவே இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தெலுங்கானாவில் டிசம்.7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

என்.டி.ஆரின் மகன் என்.ஹரிகிருஷ்ணாவின் மகள் சுஹாசினி ஆவார். என்.ஹரிகிருஷ்ணா சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். சுஹாசினியின் சகோதரர்களான கல்யாண் ராம் மற்றும் என்.டி.ஆர் பிரபலமான தெலுங்கு திரைப்பட ஹீரோக்கள்.

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுஹாசினியுடன் அவரது மாமா மற்றும் தெலுங்கு திரைப்பட ஹீரோ என்.பாலகிருஷ்ணா உடன் இருந்தார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் முன் தனது தந்தையின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு சென்றார்.

தாத்தா என்.டி.ராமராவ், அப்பா மற்றும் மாமா என்.சந்திரபாபு நாயுடுவின் அரசியல் லட்சியங்களால் ஈர்ப்பு ஏற்பட்டதாக சுஹாசினி கூறியுள்ளார்.

.