This Article is From Nov 04, 2019

தாஜ் மகாலுக்குள் புகுந்த மலைப்பாம்பு! சுற்றுலாப் பயணிகள் தெறித்து ஓட்டம்!!

கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போலீசார் திணறினர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வனத்துறை உதவியோடு பாம்பு பிடிக்கப்பட்டது.

தாஜ் மகாலுக்குள் புகுந்த மலைப்பாம்பு! சுற்றுலாப் பயணிகள் தெறித்து ஓட்டம்!!

பிடிபட்ட பாம்பு 9 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

Agra:

சர்வதேச சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்துசெல்லக் கூடிய தாஜ்மகாலில், மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனையறிந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் ஒருவழியாக பாம்பு பிடிக்கப்பட்டது.

9 அடி நீளம் கொண்டமலைப்பாம்பு தாஜ்மகாலின் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்துள்ளது. முதலில் இதனை யாரும் பார்க்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் பாம்பைப் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த செய்தி காட்டுத் தீயாக பரவியதால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அதிக பாம்புகள் வந்திருக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையில் அவர்களும், நாலாபுறம் சிதறி வெளியேறத் தொடங்கினர்.

அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து பாம்பை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

வனத்துறை உதவியால் பாம்பு பிடிக்கப்பட்டு ஆய்வுக்காக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனைகள் முடிந்ததும், வனப்பகுதிக்குள் பாம்பு விடப்பட்டது.

தாஜ்மகாலை ஒட்டி பசுமையான புற்கள் காணப்படுகின்றன. அதில் உலாவுவதற்கு பாம்பு வந்திருக்கலாம்என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

.