இதற்கு முன்னர் கடந்த வாரம் நடந்த விபத்தில் 20 பேர் பலி ஆனார்கள் என்பது கூடுதல் தகவல்.
Kathmandu, Nepal: நேபாளத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு சென்ற பஸ் விபத்துக்குள்ளானதால் 23 பேர் பலி. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பயணிகள் படுகாயமடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனரும் உயிரிழந்தார்கள்.மாணவர்கள் பெரும்பாலும் 16 மற்றும் 20 வயதுடையவர்களாக இருந்தனர்.
அந்த வாகனத்தில் சென்ற 37 பேரில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரியிழந்தனர். மேலும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இச்சம்பவத்தில் 14 காயமடைந்து உயிர் தப்பினர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் ‘இந்த சம்பவத்தை விசாரித்தபோது, அதிவேகமாக சென்றதே முதன்மையான காரணமாக இருக்கும் எனத் தெரிகிறது' என போலீஸ் அதிகாரி பேல் பாஹாதூர் பான்டே தெரிவித்தார்.
சாலை மிகவும் மோசமாக உள்ளதாலும் அதிவிரைவாக செல்வதாலும் விபத்துக்கள் ஏற்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு முன்னர் கடந்த வாரம் நடந்த விபத்தில் 20 பேர் பலி ஆனார்கள் என்பது கூடுதல் தகவல்.