This Article is From Nov 16, 2019

Sharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 கைப்பற்றியது

Sharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி?

பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் (Sharad Pawar) மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) ஆகியோர் வரும் ஞாயிற்றுக் கிழமை நேரில் சந்தித்துப் கூட்டணி அரசு அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சியைமப்பதற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சியமைக்கும் நடவடிக்கையாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை (Common Minimum Programme) உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 

இதுதொடர்பாக 3 கட்சிகளின் தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. 

முன்னதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவீஸ் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் அரசு அமைந்தால், 6 மாதத்திற்கு மேல் தாக்குப்பிடிக்காது என்று கிண்டல் செய்திருந்தார். 

அவரை கலாய்த்த சரத் பவார், 'எனக்கு தேவேந்திர பட்னாவீசை கடந்த சில ஆண்டுகளாக தெரியும். ஆனால் அவர் ஜோசிய பார்ப்பார் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. நாங்கள் அமைக்கும் கூட்டணி அரசு முழு ஆட்சியையும் நிறைவு செய்யும்,' என்று கூறினார். 
 

.