This Article is From Sep 28, 2018

"தனுஶ்ரீ வைக்கும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன்" - நடிகர் நானா படேகர்

தேவையற்ற அவதூறுகளை பரப்பினாலும், என்னுடைய நற்பணியை நான் தொடர்ந்து செய்வேன்

நானா படேகர் நடித்த ‘ஹார்ன் ஓக்கே ப்ளீஸ்’ திரைப்படத்தில் இருந்து தனுஶ்ரீ விலகினார்

New Delhi:

தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான தனுஶ்ரீ தத்தா, பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஹார்ன் ஓக்கே ப்ளீஸ்’ என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்படிப்பின் போது, நானா பட்டேக்கர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் எனவும், அது பலருக்குத் தெரிந்தும் அமைதி காத்தனர் என்றும் தனுஶ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை நானா படேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள நானா, “என் மீதுள்ள குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன். தேவையற்ற அவதூறுகளை பரப்பினாலும், என்னுடைய நற்பணியை நான் தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நானா படேகர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். இந்த நற்பணியை குறித்தே அவர் சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

.