This Article is From Oct 09, 2018

கோவை அரசு மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

கடந்த வாரம் சிறைக்குள் கொசு மருந்தை குடித்தும், கையை அறுத்துகொண்டும் தற்கொலை செய்ய முயன்ற கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை அரசு மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த கைதி.

Coimbatore:

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற கைதி செல்வராஜ் (31), கடந்த வாரம் சிறைக்குள் கொசு மருந்தை குடித்தும், கையை அறுத்துகொண்டும் தற்கொலை செய்ய முயன்றார். இதனால் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று மருத்துவமனையில் இருந்து கழிவறை வழியே தப்பிச்சென்றுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறும்போது, கைதி செல்வராஜ் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி செல்வராஜ் இன்று காவலர்கள் பிடியில் இருந்து தப்பிச்சென்றுள்ளார் என்றார். மேலும், செல்வராஜை போலீசார் தீவிரமாக தேடிவருவதாகவும், விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

.