This Article is From Feb 25, 2020

“திடீர்னு ஜெயலலிதா நினைவு வந்து…”- ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!!

“ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் கழித்து திடீர் நினைவு வந்து, அவர் பிறந்த நாளை 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக' அறிவித்துள்ளது"

“திடீர்னு ஜெயலலிதா நினைவு வந்து…”- ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் இன்று. அதை அதிமுகவினர், நினைவுகூர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள். இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு திடீரென்று ஜெயலலிதாவின் நினைவு வந்துவிட்டதாகக் கூறி விமர்சனம் செய்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

இது குறித்து மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் கழித்து திடீர் நினைவு வந்து, அவர் பிறந்த நாளை 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக' அறிவித்துள்ளது EPSன் 

பொள்ளாச்சி பாலியல் கொடுமை, சுபஸ்ரீ மரணம், காலிழந்த அனுராதா எனத் தீராக் கறைகளுடன் பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச இவர்களுக்கேது தகுதி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

.