This Article is From Sep 23, 2018

"தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை" - முக அழகிரி திட்டவட்டம்

மாநில அரசை விமர்சித்த அழகிரி, போராட்டங்கள் மட்டுமே நடக்கிறது என தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முக அழகிரி, பாஜகவுடன் இணைத்து பேசுவது வெறும் வதந்தியே என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசை விமர்சித்த அழகிரி, போராட்டங்கள் மட்டுமே நடக்கிறது என தெரிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும், தேர்தலில் போட்டியிட்டால் அனைவரும் ஆதரவு தருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தனிக்கட்சி தொடங்குவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை எனவும், கருணாநிதியின் கொள்கைகளை முழுமையாக கடைபிடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.