This Article is From Jan 16, 2019

கர்நாடகாவில் முடிவுக்கு வந்ததா அரசியல் குழப்பம்..?- மிஸ் ஆன 2 காங்., எம்எல்ஏ-க்கள் திரும்பி வந்தனர்!

கர்நாடகாவில் மொத்தம் 224 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸ் - மஜத வசம் 118 பேர் உள்ளனர். பாஜக-விடம் 104 பேர் உள்ளனர்.

கர்நாடகாவில் முடிவுக்கு வந்ததா அரசியல் குழப்பம்..?- மிஸ் ஆன 2 காங்., எம்எல்ஏ-க்கள் திரும்பி வந்தனர்!

கர்நாடகாவின் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றனர். 

ஹைலைட்ஸ்

  • கர்நாடகாவில் கூட்டணி அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது
  • சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் கூட்டணி அரசுக்கு வழங்கி வத ஆதரவு வாபஸ்
  • தொடர்ந்து கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது
Bengaluru:

கர்நாடகாவில் மீண்டும் அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக சார்பில் இருக்கும் 104 எம்.எல்.ஏ-க்கள் டெல்லிக்கு விரைந்து குர்கானில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நேற்று முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பாஜக தரப்பு, “கர்நாடக முதல்வர் குமாரசாமி, எங்கள் உறுப்பினர்களை தன் வசம் இழுக்கப் பார்க்கிறார்” என்று பரபரப்புக் குற்றச்சாட்டு சுமத்தியது. 

ஆனால் காங்கிரஸ் தரப்போ, “பாஜக-தான் ஆட்சி அரியணையில் ஏற சூழ்ச்சி செய்து வருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ், எங்களது 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமறைவாக இருக்கின்றனர் என்றும் தகவல் தெரிவித்தது. 

“எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை, பாஜக தன் வசம் வைத்துள்ளது. இதுவே பாஜக பின் வாசல் வழியாக ஆட்சியமைக்க எடுத்த நடவடிக்கையாக பார்க்க முடியும். ‘ஆபரேஷன் லோட்டஸை' அவர்கள் நடைமுறப்படுத்த உள்ளனர்” என்று காங்கிரஸ் தரப்பு பகீர் கிளப்பியது. 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக தரப்பு எடுத்த நடவடிக்கையை ‘ஆபரேஷன் லோட்டஸ்' என்று அழைத்தனர். தற்போதும் அதைப்போல ஒரு திட்டம் செயல்படுத்த பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. 

இப்படி அடுத்தடுத்த அரசியல் அதிரடிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், ‘தலைமறைவாக' இருந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திரும்பி வந்துள்ளனர். முதல்வர் குமாரசாமி நேற்று இந்த குதிரைபேர விவகாரம் குறித்து, “தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் எங்களுடன் தொடர்பில்தான் உள்ளனர். அவர்கள் அனைவரும் என்னிடம் தகவல் தெரிவித்துவிட்டுத்தான் மும்பைக்குச் சென்றனர். என் தலைமையிலான அரசாங்கத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதை செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார் திரும்பிவந்துள்ள எம்.எல்.ஏ பீமா நாயக்.  

கர்நாடகாவில் மொத்தம் 224 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸ் - மஜத வசம் 118 பேர் உள்ளனர். பாஜக-விடம் 104 பேர் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேர் போதும். எனவே தற்சமயம் காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது. அதே நேரத்தில் கர்நாடகாவின் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றனர். 

.