This Article is From Feb 22, 2019

சென்னை விமானநிலையத்தில் அமைச்சரின் செல்போன் திருட்டு!

சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செல்போன் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் அமைச்சரின் செல்போன் திருட்டு!

கடந்த 17-ந்தேதி காலையில் ஏர் இந்தியா விமானத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திருச்சியில் இருந்து சென்னை வந்துள்ளார். அப்போது அவருடைய செல்போன் திடீரென காணாமல் போய் உள்ளது.

ஆனால், செல்போன் காணாமல் போனதை, கவனிக்காத அமைச்சர், வீட்டிற்கு சென்ற பின்பே செல்போன் திருட்டு போனதை அறிந்துள்ளார். இதையடுத்து அமைச்சரின் உதவியாளர் ஏர் இந்தியா அலுவலகம் மற்றும் விமானநிலைய அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.

இதையடுத்து, சென்னை விமானநிலைய காவல்நிலையத்திலும், சைபர் கிரைம் பிரிவிலும் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் அன்றைய தேதியில் பதிவாகியுள்ள கேமரா காட்சிகள் மற்றும் அந்த விமானத்திற்குள் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

விமான நிலையத்தில் அமைச்சரின் செல்போனே திருட்டு போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.