This Article is From Aug 20, 2019

என் வீடியோவை பார்ப்பவர்கள் சாதாரண மனுஷியாக என்னை ஏற்றுக்கொள்வதில்லை - 'பார்ன் ஸ்டார்' மியா கலிஃபா உருக்கம்

2014 ஆம் ஆண்டு மியாமி கடற்கரையில் இருந்தபோது, தனது முதல் ஆபாசப்படத்தில் நடித்தார் மியா கலிஃபா. ஆனால், அதே ஆண்டு இறுதியில் போர்ன்ஹப் தளத்தின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தார்.

என் வீடியோவை பார்ப்பவர்கள் சாதாரண மனுஷியாக என்னை ஏற்றுக்கொள்வதில்லை - 'பார்ன் ஸ்டார்' மியா கலிஃபா உருக்கம்

Mia Khalifa: மியா கலிஃபாவை இன்ஸ்டாகிராமில் 17 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

மியா கலிஃபா இளைஞர்கள் பலரின் அந்தரங்க இரவுக்கு சொந்தக்காரர். ஆபாசப் பட நாயகியான மியா கலிஃபா நடித்த மூன்று மாதங்களில் மிகவும் பிரபலமானவர். தன் வாழ்க்கை குறித்து யூ ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன் வாழ்க்கை குறித்த உருக்கமான நேர்காணலை கொடுத்துள்ளார்.

26 வயதாகும் மியா கலிஃபா (Mia Khalifa) லெபனானில் பிறந்தவர். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவர் 2014 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் ஆபாசப்பட துறையில் நடிகையானார்.

ஆபாசப்பட துறையில் வெறும் மூன்று மாதங்களே நடிகையாக இருந்த நிலையில் 2015ல் அவர் அதிலிருந்து வெளியேறினார். ஆனாலும், ஆபாசப்பட தளமான போர்ன்ஹப்பில் முன்னணி நடிகைகளில் அவரும் ஒருவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவருடைய தோழி மேகன் அபாட்டுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ஆபாசப்பட துறையை பற்றிய பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். ஆபாசப்பட துறையில் மியா கலிஃபாவின் காணொளிகள் மிகவும் பிரபலமானவை. எல்லா காலத்திலும் அதிகம் பார்க்கப்பட்ட ஆபாசப்பட நட்சத்திரங்களில் மியாவும் ஒருவர்.

ஆனால், தான் முன்னணி பிரபலமாக இருந்தாலும் ஊதியம் என்று வரும்போது, தனக்கு சரிசமமான ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார் மியா.

தான் டஜன் கணக்கில் படங்களில் நடித்தபோதும் வெறும் 12,000 டாலர்களே நிறுவனங்கள் வழங்கியதாகவும், அதன் பிறகு தனது காணொளிகள் பிரபலமான பிறகும்கூட ஒரு ரூபாய்கூட தனக்கு தரவில்லை என்றும் அந்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். 

mia khalifa

இணையத்தில் தனது பெயரில் இன்னும்கூட பக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்ட மியா, அவ்வாறான இணையதளங்கள் தனக்கு சொந்தமானவை அல்ல என்றும், அதிலிருந்து தனக்கு எவ்வித லாபமும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பெயரில் இயங்கும் இணையதளங்கள் வேறு பெயர்களில் இயங்கினாலே போதும் என்கிறார் மியா கலிஃபா.

மியா கலிஃபாவின் ஆபாசப்பட கால வாழ்க்கை மிகக் குறுகிய காலமே என்றாலும், சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. ஹிஜாப் ஒன்றை அணிந்துகொண்டு அவர் பாலுறவில் ஈடுபடும் காட்சி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதுபற்றி நேர்காணலில் விவரித்த மியா,"அந்த காணொளி பதிவேற்றப்பட்டவுடன், காட்டுத்தீயாக பரவத் தொடங்கியது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து உயிருக்கு அச்சுருத்தல்களும் வந்தன. என்னுடைய குடியிருப்பை கூகுள் மேப்பில் குறிப்பிட்டு வந்ததால், நான் வீட்டை காலி செய்துவிட்டு இரண்டு வாரங்கள் விடுதி ஒன்றில் தங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்," என்றார் அவர்.

மியா கலிஃபாவை இன்ஸ்டாகிராமில் 17 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அடிக்கடி அவரை கேலி செய்து நிறைய பதிவுகள் வரும் என்றாலும் மியா அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.

"சின்ன சின்ன விஷயங்களை நான் கண்டு கொள்வது கிடையாது. அது என்னை காயப்படுத்தவும் செய்யாது. கிண்டல் செய்கிறீர்களா செய்துகொள்ளுங்கள். ஆனால், நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? என்னை கொல்லப்போகிறீர்களா? இல்லையே அப்புறம் என்ன," என்று கேட்டு கூலாக மற்றவர்களின் கேலி கிண்டலை கடந்து செல்கிறார்.

2014 ஆம் ஆண்டு மியாமி கடற்கரையில் இருந்தபோது, தனது முதல் ஆபாசப்படத்தில் நடித்தார் மியா கலிஃபா.

ஆனால், அதே ஆண்டு இறுதியில் போர்ன்ஹப் தளத்தின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தார்.

"நான் இன்னும் என்னுடைய கடந்த காலங்களிலிருந்து மீளவில்லை," என்கிறார் மியா கலிஃபா. என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தற்போது என் நோக்கமாக இருக்கிறது. அதற்காகவே நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். மற்றபடி பெருமை எனக்குத் தேவையில்லை. 

அந்தரங்க பொழுதுகளில் என்னை ஏற்றுக் கொண்டவர்கள். என்னை இயல்பான நேரங்களில் சக மனுசியாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் என்பதே மியாவின் வருத்தமாக உள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.