This Article is From Oct 14, 2019

வயக்காட்டுல இருந்து snake-ஐ அசால்டாக எடுத்த ‘வீரன்’… கடைசில இருக்கு பாருங்க ஒரு ட்விஸ்ட்ட்ட்டு!

Snake - சிலருக்குப் பாம்பைப் பற்றிப் பேசினாலே, அது மேலே ஊறுவது போன்ற உணர்வு வரும்

வயக்காட்டுல இருந்து snake-ஐ அசால்டாக எடுத்த ‘வீரன்’… கடைசில இருக்கு பாருங்க ஒரு ட்விஸ்ட்ட்ட்டு!

Snake - அப்படிபட்டப் பாம்பை வெறும் கையால் எடுக்கும் வீரனை நீங்கள் பார்த்ததுண்டா..?

பாம்பைக் (Snake) கண்டால் படையும் நடங்கும் என்று சொல்வதுண்டு. பலருக்குப் பாம்பை நேரில் பார்த்தால் அல்ல, மனதில் நினைத்தால் கூட பயம் கொப்பளிக்கும். சிலருக்குப் பாம்பைப் பற்றிப் பேசினாலே, அது மேலே ஊறுவது போன்ற உணர்வு வரும். ஆனால், அப்படிபட்டப் பாம்பை வெறும் கையால் எடுக்கும் வீரனை நீங்கள் பார்த்ததுண்டா..?

அவசரப்பட வேண்டாம்… தற்போது சொல்லும் சம்பவத்திலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வயக்காடு ஒன்றில் இருந்து பாம்பின் வால் பகுதியைப் பிடித்து ஒரு நபர் இழுக்கிறார். அவருக்கு அருகில் பயத்துடன் நிற்கும் இருவரையும் அங்கிருந்து விலகிப் போகும்படி சைகை செய்கிறார். 

ஒரு கட்டத்தில் பாம்பு வெளியே வந்தால் என்னவாகும் என்கிற பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. பின்னர் அவர் திடீரென்று பாம்பை உறுவுகிறார். பொறுக்க… அது பாம்பு போல தெரிந்தாலும், உண்மையில் அது இடுப்பில் கட்டும் பெல்ட். இந்த ட்விஸ்ட் கடைசியில்தான் தெரிகிறது. அதுவரை பதற்றத்தில் வைத்திருக்கும் இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது. 

வீடியோவை கீழே பாருங்கள்:
 

பலரும் வீடியோ குறித்து கருத்திட்டு வருகிறார்கள். 

Click for more trending news


.