This Article is From Dec 18, 2018

அழுக்கு சாக்ஸை நுகர்ந்து பார்த்தவருக்கு என்னாச்சி தெரியுமா..?

பஸ்ஸில் தனது அழுக்கு சாக்ஸ்சுடன் இருந்ததால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

அழுக்கு சாக்ஸை நுகர்ந்து பார்த்தவருக்கு என்னாச்சி தெரியுமா..?

தன்னுடைய சொந்த சாக்ஸ்யை தினமும் நுகர்ந்ததால் நுரையீரலில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு ஒருவர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் இன்று வெளியானது.

பெயர் வெளியிட விரும்பாத அந்நபர் தினமும் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, தனது உடைகளை மாற்றும்போது தனது சாக்ஸை முகர்வதை ஓரு பழக்கமாக கொண்டிருந்தார். இந்த வினோத பழக்கத்தால் அவருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் சீனாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், எக்ஸ்.ரே வின் மூலம் தனக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டறிந்தார்.

மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில் அவர் தினமும் சாக்ஸ்சை முகர்ந்தால் மூக்கில் புஞ்சைகள் சேர்ந்தன. அதனாலே அவருக்கு உடல்நலம் கேடானது எனத் தெரிவித்தார். மேலும் சரியான அளவு தூக்கம் இல்லாமை கூட ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அழுக்கு சாக்ஸால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டுவது இதுவே முதல் முறை என்றாலும் கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் பஸ்ஸில் தனது அழுக்கு சாக்ஸ்சுடன் இருந்ததால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.