This Article is From Feb 21, 2020

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது!!

பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது!!

கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Greater Noida:

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவரை கிரேட்டர் நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர். 

சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டவரின் பெயர் சாந்த் குரேஷி என போலீசார் தெரிவித்தனர்.

குரேஷியின் முகநூல் பதிவைப் பார்த்த பாஜக நிர்வாகிகள், இது சம்பந்தமாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதல்வருக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டிருப்பது உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

.