This Article is From Oct 23, 2018

‘மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்!’- சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

நவம்பர் 28 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது

‘மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்!’- சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மாநிலத்தில் இருக்கும் 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

Indore:

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தூரின் ஜனஷிர்வாத் பிரசாரக் கூட்டத்தில் பேசிய சவுகான், ‘மத்திய பிரதேச மாநிலத்தை நாம் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளோம். ஆனால், நாட்டிலே சிறந்த மாநிலமாக மத்திய பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். நாம் மாநிலத்திலிருந்து வறுமையை அடுத்த 5 ஆண்டுகளில் ஒழிக்க வேண்டும். ஏழைகளுக்கு வீடு கட்டித் தர வேண்டும். மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

2003 ஆம் ஆண்டு நாம் ஆட்சியைப் பிடித்த போது, மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமானதாக இருந்தது. காங்கிரஸ் நம் மாநிலத்தை இருளுக்குள் தள்ளி இருந்தது. ஆனால், அதையெல்லாம் மீறி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நாம் திருப்பிவிட்டோம். அதளபாதாளத்தில் இருந்த பொருளாதாரத்தை, மீட்டெடுத்தது பாஜக தான்' என்று பேசியுள்ளார். 

நவம்பர் 28 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் இருக்கும் 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 

.