This Article is From Jan 29, 2019

மத்திய பிரதேசத்தில் 2 கார்கள் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு - மோடி இரங்கல்

இரு கார்களும் ஒன்றின் பின் ஒன்று மோதிக்கொண்டன

மத்திய பிரதேசத்தில் 2 கார்கள் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு - மோடி இரங்கல்

கார்கள் உருக்குலைந்து கிடக்கும் காட்சி

Ujjain:

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜெய்னில் நடந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ராம்கர் பகுதியில் நள்ளிரவு 12.30-க்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

நாக்டா பகுதியில் திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதுகுறித்து நாக்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் பதிவில், ''மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கும் விபத்து துரதிருஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். 

உயிரிழந்தவர்கள் அனைவரும் திலாகேஷ்வர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆந்தராவில் பள்ளிப் பேருந்து குண்டூர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. அதிலிருந்த 50 மாணவர்களில் 3 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். 

.