This Article is From Aug 29, 2018

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

நேற்று இரவு கோபாலபுரத்தில் இருந்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
Chennai:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி, தயாளு அம்மாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்று இரவு கோபாலபுரத்தில் இருந்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல் நிலை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்று அறிக்கை மூலம் தகவல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 

அவர் இன்னும் ஓரிரு நாட்களில் கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்புவார் என்று சில வாட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.

.