This Article is From Mar 16, 2019

காங். மூத்த தலைவர் சசி தரூரின் உறவினர் பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் பாஜகவில் சேர்ந்த நிலையில் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.

காங். மூத்த தலைவர் சசி தரூரின் உறவினர் பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்.

Kochi:

கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உறவினர் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் பாஜகவில் சேர்ந்த நிலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

இதுகுறித்து பாஜகவில் சேர்ந்துள்ள சசி தரூரின் உறவினர் சோபனா சசிகுமார் மற்றும் அவரது கணவர் சசிகுமார் ஆகியோர் கூறும்போது நீண்ட நாட்களாக தாங்கள் பாஜகவின் ஆதரவாளர்களாக இருந்து வந்தோம் என்று தெரிவித்தனர். 

இந்த இருவரை தவிர்த்து இன்னும் சிலர் பாஜகவில் பாஜகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்ச்சி பாஜக தலைவர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில் கொச்சியில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய சசிதரன் பிள்ளை, மிகவும் பாரம்பரியம் மிக்க சசி தரூர் குடும்பத்திலிருந்து பாஜகவில் மக்கள் இணைந்துள்ளனர். அவர்களை வரவேற்கிறோம் என்று கூறினார். 

முன்னதாக நேற்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார். அவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருந்தார். இதுபற்றி ராகுல் காந்தி கூறுகையில் வடக்கன் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை என்று தெரிவித்தார். 

.