This Article is From Sep 27, 2018

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வக்கீல் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 11 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்த ஒரு வழக்கறிஞர், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வக்கீல் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

குற்றம் சாட்டிய பெண்ணுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளது

Gorakhpur:

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 11 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்த ஒரு வழக்கறிஞர், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து எஸ்.பி விஜய் சிங், ‘பெர்வேஸ் பர்வாஸ் மற்றும் முகமூத் என்கிற ஜும்மான் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எங்களிடம் ஒரு பெண் புகார் அளித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு மருத்துவ சோதனை செய்தோம். அதில் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். 

கோராக்பூர் எம்.பி-யாக யோகி ஆதித்யநாத் இருந்தபோதே, அவர் மீது பல்வேறு நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தவர் பர்வாஸ். அவர், ஆதித்யநாத் வெறுப்பை வளர்க்கும் வகையில் பேசியுள்ளார் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். 

.