This Article is From Nov 03, 2018

திருமணமாகி 6 மாதங்களில் டைவர்சுக்கு விண்ணப்பித்த லாலுவின் மகன்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாபுக்கும், ஐஸ்வர்யா ராய் என்ற மணமகளுக்கும் 6 மாதங்களுக்கு முன்பாக வெகு விமர்சையாக திருமணம் நடந்தது

திருமணமாகி 6 மாதங்களில் டைவர்சுக்கு விண்ணப்பித்த லாலுவின் மகன்

திருமணத்தின்போது தேஜ் பிரதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய்

Patna:

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் டைவர்ஸ் கேட்டு பாட்னா நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பாக அவருக்கும் பீகார் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் (Tej Pratap Wife) திருமணம் நடந்தது.

தேஜ் பிரதாப் டைவர்ஸ் கேட்டு விண்ணப்பித்த விவரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும், தேஜ் பிரதாப் மற்றும் அவரது தாயார் ராப்ரி தேவியைக் காண மணமகள் ராய் (Tej Pratap Wife) மற்றும் அவரது பெற்றோர் தேஜ் பிரதாபின் வீட்டுக்கு விரைந்தனர்.

இதற்கிடையே ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், தன்னைப் பார்க்க உடனடியாக வருமாறு தேஜ் பிரதாபுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், லாலு குடும்பத்தில் மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது.

மே 12-ம் தேதி நடந்த தேஜ் பிரதாப் - ஐஸ்வர்யா ராய் திருமணத்தில் சுமார் 10 ஆயிரம் வி.ஐ.பி.-க்கள் கலந்து கொண்டனர். பீகார் கவர்னர் சத்ய பால் மாலிக், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் லாலு மகனின் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.

லாலுவின் 2-வது மகன் தேஜஸ்வி யாதவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்தான் தற்போது கட்சிப் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

.