This Article is From Oct 17, 2018

சபரிமலை விவகாரம் : கேரளாவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி - 50 பேர் கைது

சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

சபரிமலை விவகாரம் : கேரளாவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி - 50 பேர் கைது

பதற்றம் காணப்படுவதால் சபரிமலை அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Thiruvananthapuram:

சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில், இதற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சபரி மலைக்கு வரக்கூடிய கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் பெண்கள் அமைப்பினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வாகனங்களில் பெண்கள் இருந்தால் அவர்களிடம் பாரம்பரியத்தை காப்பாற்ற சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி அவர்களை, வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், சபரிமலைக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் வாகனங்களை மறித்த போராட்டக்காரர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.
 

நிலைமை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நிலக்கல் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் சற்று தீவிரமாக ஈடுபடுபவர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் 50-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. இதற்கிடையே, 144 தடை உத்தரவு சபரிமலையில் போடப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 

.