This Article is From May 28, 2019

சத்தமில்லாமல் சூப்பர் மார்க்கெட் கார்ட்டில் சுருண்டு படுத்திருந்த பாம்பு... திடுக் சம்பவம்!

பிரபல நிறுவனத்தில் இவ்வாறு நிகழ்ந்ததிற்கு மக்கள் தங்களது அச்சத்தையும் அதிர்ச்சியையும் பதிவு செய்துள்ளனர்.

சத்தமில்லாமல் சூப்பர் மார்க்கெட் கார்ட்டில் சுருண்டு படுத்திருந்த பாம்பு... திடுக் சம்பவம்!

அமெரிக்காவில் இது நிகழ்ந்தது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் கடையுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் வணிக வண்டியில் (Shopping cart) பாம்பு ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார்.

பயத்தில் அவர் சத்தம் போட, வால்மார்ட் எதிரே நின்ற காவல்துறை அதிகாரி உதவிக்கு வந்துள்ளார். இதனை வடகிழக்கு காவல்பிரிவு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

வணிக வண்டியில் இருந்த பாம்பு, விசமில்லாத பாம்பு என்று கண்டறியப்பட்டது. அதன் பின் இரண்டு வண்டிகளுக்கு இடையே சிக்கிய அந்த பாம்பை ஜான் ஹெக்கமான் என்பவரின் உதவியால் மீட்டனர்.

பாம்பை மீட்கும் போது ஹெக்கமானை அந்த பாம்பு ஒருமுறை கடித்துள்ளது.

இதனை பதிவு செய்த வடகிழக்கு காவல் பிரிவு, 1500 ஷேர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட கமண்ட்களையும் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுக்கு சமூகவலைதளங்களில் மக்கள், பிரபல நிறுவனத்தில் இவ்வாறு நிகழ்ந்ததிற்கு தங்களது அச்சத்தையும் அதிர்ச்சியையும் பதிவு செய்துள்ளனர்.

Click for more trending news


.