This Article is From Nov 18, 2018

லல்லு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசம்! - ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.,

கால்நடை தீவன ஊழலில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ், போலீஸ் காவலில் தற்போது ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லல்லு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசம்! - ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.,

லல்லு பிரசாத் யாதவிற்கு முறையான சிகிச்சை வழக்கப்பட வேண்டுமென்று எம்.எல்.ஏ ரேகா தேவி கோரிக்கை விடுத்தார்.

Ranchi:

இருதய கோளாறு காரணமாக முன்னாள் பீகார் முதலமைச்சர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவை ராஞ்சி ராஜேந்திர இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் சந்தித்த அக்கட்சியின் எம்.எல்.ஏ ரேகா தேவி, லல்லு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமாகிவிட்டது. அவரால் தானாக எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியவில்லை என்று கூறியுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவிற்கு முறையான சிகிச்சை வழங்கப்படவேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், லல்லுஜி-யின் உடல்நிலை மோசமைடந்துள்ளது. அவரால் தானாக எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியவில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்துள்ளது. அவருக்கு முறையான சிகிச்சை வழக்கப்படுகின்ற இடத்திற்கு அவரை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கால்நடை தீவன ஊழலில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ், போலீஸ் காவலில் தற்போது ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

.